About Temple

இத்திருக்கோயிலில் அமைந்துள்ள 27 நட்சத்திர அதிதேவதைகள், 27 நட்சத்திர விருட்சங்கள் அவரவர் ஜென்ம நட்சத்திர அதிதேவதை மற்றும் விருட்சத்தினை அறிந்து வழிபடுபவர்களுக்கு சகலவிதமான தோஷங்கள், பாபங்கள் அகலும், நிம்மதி உண்டாகும், வாழ்க்கை சிறப்புற மேம்படும். முப்பிறப்பில் செய்த பாபம், இப்பிறப்பில் செய்த பாபம், நாகதோஷம், கிரக தோஷம், லக்ன தோஷம், மகா திசையினால் உண்டாகும் சங்கடங்கள் விலகும். பிதுர்தோஷம் நீங்கும், திருமண தடை அகலும், சத்புத்திர சந்தானம் உண்டாகும், நம் வாழ்வில் ஏற்படுகின்ற சகலவித பிரச்னைகள் நீங்கி வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்ததும், மிகவும் சக்தி வாய்ந்ததுமான 27 நட்சத்திர விருட்சங்களும், 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் திருக்கோயில் காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கூர் கூட்டு சாலை அருகில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் தென்கிழக்காக கூழமந்தல் ஏரிக்கரையின் அருகில் ஆகம விதிப்படி நடுநாயகனாக நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், சனீஸ்வர பகவான், ராகு-கேது அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சம் ஆகும். குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரவர் நட்சத்திர அதிதேவதை மற்றும் விருட்சங்களை வணங்கி அனைத்து வளங்களும் பெறலாம்.

Read More